வவுனியாவில் நேற்று(08.09.2016) காலை மாகாண கைத்தொழில் கண்காட்சி நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.மயூரன், ஜெயதிலக, இ.இந்திரராசா, ஆரச, அரச சார்பற்ற ஊழியர்கள,; வடமாகாண கைத்தொழில் உற்பத்தியாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண கைத்தொழில் கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் திறந்து வைத்ததுடன் கண்காட்சியினையும் பார்வையிட்டார்.
அத்துடன் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தினால் சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியலாய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன .
வடமாகாண உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்களின் கண்காட்சிக்கூடம், செயன்முறைக்கூடம், உற்பத்தி விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இக் கண்காட்சி 08.09.2016 தொடக்கம் 10.09.2016 வரை காலை 9 மணிமுதல் மாலை ஆறுமணி வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
































































































