பால் எடுக்கச்சென்றவருக்கு பாதையில் நடந்த பரிதாபம்!!

264

1459149523-8816
திருகோணமலை – கிண்ணியாப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டலடியூற்றுப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆலங்கேணிப் பகுதியை சேர்ந்த சந்திரலிங்கன் யுகன் (வயது 29) என்பவரே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலிருந்து திருகோணமலை நகர் நோக்கி மீன் ஏற்றிக்கொண்டு பயணித்த படி ரக வானும் ஆலங்கேணிப் பகுதியிலிருந்து கண்டல்காட்டுப் பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளார்.

கண்டல்காட்டுப் பகுதியிலுள்ள மாட்டுப் பட்டியிலிருந்து பால் எடுத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோதே விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.இதேவேளை, வானில் சென்றோர் படுகாயமடைந்துள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.