இலங்கையில் முதல் முறையாக 5 வயது சிறுமிக்கு மார்புப் புற்றுநோய் சத்திர சிகிச்சை!!

234

operation

இலங்கையில் முதல் முறையாக மிகவும் குறைந்த வயதுடைய சிறுமிக்கு மார்பு புற்று நோய் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

5 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று குறித்த சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுக்கவுள்ளதாகவும், அவர் மிகவும் பலவீனமாக உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் தடுப்பு மாதம் என்பதனால் அதற்காக ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சுகாதாரக் கல்விப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் மற்றும் இலங்கை பெண்களிடே பதிவாகும் புற்றுநோய்களில், மார்பக புற்று நோய் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.

நாள் ஒன்றுக்கு புதிதாக 6 – 7 நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டுபிடித்தால் குனமாக்கிவிட முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.