வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று 30.09.2016 வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில் நிலவும் பௌதிக மற்றும் ஆஸ்ரிய ஆளணி தொடர்பாக நிலவுகின்றமற்றும் குடிநீர் போக்குவரத்து தொடர்பான பிரச்சினை, கல்வி அபிவிருத்தி மற்றும் அடைவு மட்டத்தை உயர்த்தவேண்டியதன் அவசியம் தொடர்பான ஆரோக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டன.
வவுனியாவின் வரலாற்றில் முதன்முறையாக சமூகத்தின் அனைத்து மட்டத்தையும் சேர்ந்த அதிகாரிகளை ஒன்றிணைத்து நடாத்தபட்ட மேற்படி கலந்துரையாடலில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவசக்தி ஆனந்தன்,சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர்ப.சத்தியலிங்கம்,வடமாகாணசபைஉறுப்பினர்கள்,ஜி.ரி.லிங்கநாதன் ,ஐ. இந்திரராஜா,.ம.தியாகராஜா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்,க.பரந்தாமன் ,வவுனியபிரதேச செயலாளர் கா.உதயராஜா, நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேச போலிஸ் உத்தியோகத்தர்கள், நெடுங்கேணி பிரதேசசபை செயலாளர்கள் அரச தனியார் போக்குவரத்து சபையின் அதிகாரிகள் மற்றும் பாலசகளின் அதிபர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், உதவிகல்வி ,பிரதிகல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் எனப் பல்வேறு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.