வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் 195 புள்ளிகளைப்பெற்று வடமாகாணத்தில் முதலிடம்!!

1271

1

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி வடமாகாணத்தில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

வடமாகாண ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அபிசிகனை வவுனியா நெற் தொடர்புகொண்டபோது, தான் இந்த பெறுபேற்றினை பெற்றுகொள்ள தனக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து இந்த சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்த இவருக்கு வவுனியா நெற் வாசர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

14555979_1322803337739616_1655942323_n 14608191_1322803477739602_1871908066_n12314569223_1323246291028654_177821601_n