வவுனியாவில் கொதிக்கும் எண்ணையில் வீழ்ந்து சிறுவன் படுகாயம்!!

275

viber-image

வவுனியா மணிபுரத்தில் இன்று (16.10.2016) கொதிக்கு எண்ணையில் வீழ்ந்து காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மணிபுரத்தில் மிக்ஸர் தயாரிப்பதற்காக இருந்த கொதிக்கும் எண்ணை வைத்திருந்த பாத்திரத்திக்குள் 2வயது சிறுவன் தவறிவீழ்ந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆணுறுப்புப் பகுதி, கால்கள் பாதிக்கப்பட்டமையினால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.