புதிய தொழில்நுட்பத்தில் பாகுபலி 2 டீஸர்!!

227

baahubali-2

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி, 600 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் மழை பொழிந்த பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதன் 2ஆம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது.

ஏறத்தாழ ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த வருடம் ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடித்துள்ளது.

‘பாகுபலி 2’ படத்தின் ஹிந்தி விநியோக உரிமையை கரண் ஜோஹர் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

அதோடு அதன் செனல் ரைட்ஸும் எந்த தென்னிந்திய படத்திற்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய விலையில் வாங்கப்பட்டிருக்கிறதாம்.

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. இன்று முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் 18 ஆவது மும்பை திரைப்பட விழா’வில் ‘பாகுபலி 2’ படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ, டீஸர், கிராபிக் நாவல் பிரிவியூ ஆகியவற்றை வெளியிடவிருக்கின்றனர்.

எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4 மணியளவில் இந்த நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதல்முறையாக 360 டிகிரி மேக்கிங் வீடியோவையும் வெளியிடுகிறார்கள். வேர்ச்சுவல் ரியாலிட்டி என்றழைப்படும் விஆர் கண்ணாடிகளை அணிந்து பார்க்கும் வகையில் ‘பாகுபலி 2’ படத்தின் டீஸரையும் வெளியிடுகிறார்கள்.