ஆட்டின் வயிற்றில் மனித உருவில் ஆட்டுக் குட்டி!!

365

aadu

தமிழகத்தில் ஆடு ஒன்றின் வயிற்றில் மனித உருவில் குட்டி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
நர்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இதில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரு உண்டான ஆடு குட்டி போடமால் இருந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை குறித்த ஆடு நிலைதடுமாறி விழுந்துள்ளது. உடனே உரிமையாளர் மணி ஆட்டின் வயிற்றை கழித்து பார்த்தபோது மனித உருவில் ஆட்டு குட்டி இருந்துள்ளது.

இதை பார்த்து விவசாயி மணி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு குட்டி இறந்துள்ளது. இச்சம்பவம் கிருஷ்ணகிரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.