குவைத்தில் சட்டவிரோத உற்பத்தி நிலையம் நடத்திய இலங்கைப் பெண் கைது!!

235

kuwait1

குவைத்தில் இலங்கை பெண் ஒருவரினால் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பட்டதுடன் சந்தேக நபரான பெண்ணும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபான பெரல்கள் 10, மதுபான போத்தல்கள் 400, மதுபானம் வடித்தலுக்கு உபயோகிக்க பயன்படும் 13 உபகரணங்கள் மற்றும் சில மூலப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மலிவான விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கபெற்ற தகவல் கிடைத்தமையையடுத்து குவைத் நாட்டின் உள்ளக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவினரினால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட அனைத்து மதுபானங்களும் அரசுடைமையாக்கப்பட்டதாக சந்தேகநபரான பெண்ணை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் அல்-டரா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அரபு நாடுகளிலுள்ள பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

kuwaitkuwait