வவுனியாவில் நேற்று (21.10.2016) மாலை 4 மணிக்கு கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பொது நோக்கு மண்டபத்தில் மீன்பிடி போக்குவரத்துத்துறை, கிராமிய அபிவிருத்தித் திணைக்கள, வீதி அமைச்சர் ப.டெனீஸ்வரனால் தெரிவு செய்யப்பட்ட 40 முன்னாள்போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி. ரி.லிங்கநாதன், செ.மயூரன், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், கிராமிய அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், அமைச்சின் செயலாளர், என பலரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், தண்ணீர் இறைக்கும் இயந்திரம் மாடு வளர்ப்பிற்கான காசோலை, தலா ஒரு பயனாளிக்கு ஜம்பதாயிரம் ரூபாவீதம் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிராம பொது அமைப்புக்கள், முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.