கண்டி முறுதலாவ பிரதேசத்தில் ஒரே வீட்டில் வசித்துவந்த சகோதரிகள் குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது தங்கையின் கணவரினால் மணிக்கட்டுடன் வெட்டி வேறாக்கப்பட்ட மூத்த சகோதரியின் கையை பெரும் சிரமத்துக்கு மத்தியில் பேராதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக மீள பொருத்தியுள்ளனர்.
கண்டி தெஹியங்க முறுத்தலாவ பிரதேசத்தில் வசித்து இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்களான போதிலும் அவர்களுக்கு குழந்தையில்லாமையினால் சொந்தவீட்டில் மனைவியின தந்தையுடன் தனிமையில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்படி பெண்ணின் தங்கை திருமணம் முடித்து கணவன், பிள்ளைகளுடன் அப்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து தனது உடன் பிறந்த தங்கை என்பதனால் இவரை வாடகை வீட்டிலிருந்த அழைத்து வந்தது அவருடைய வீட்டிலேயே குடியேற்றியுள்ளார்.
இவ்வாறு குடியேறி சுமார் 2 மாதங்கள் கழிந்த நிலையில், தான் தற்காலிகமாக குடியிருக்கும் வீட்டினை கைப்பற்றிக்கொள்ளும் பொருட்டு தங்கையின் கணவர் திட்டம் தீட்டியுள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று கருத்து வேறுபாடு காரணமாக இரு குடும்பத்தாரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அதன்போது தங்கையின் கணவர் கத்தியொன்றை எடுத்து தனது மனைவியின் சகோதரியின் கையை துண்டித்ததுடன் அதனை தடுக்கவந்த தனது மனைவியையும் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் கை துண்டிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு அவரது கணவர் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துவிட்டு அவரை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அத்துடன் காயமடைந்த அவரது தங்கை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துண்டாக்கப்பட்ட மணிக்கட்டுக் கீழாகவுள்ள கையை வீட்டின் சமையறை “சின்க்” இல் போட்டுவிட்டு வந்திருந்தமையினால், பேராதனை வைத்தியர்கள், இப்பெண்ணின் தந்தையை வீட்டுக்கு அனுப்பி துண்டிக்கப்பட்ட கைப்பகுதியை எவ்வாறேனும் பாதுகாப்பான முறையில் கொண்டு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.
அதன்பின்னர், கொண்டுவரப்பட்ட கைத்துண்டை பாரிய சிரமத்துக்கு மத்தியில் பேராதரனை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை வைத்தியர் குழுவினர் பொருத்தியுள்ளனர்.
கைபொருத்தப்பட்டு மூன்று நாட்களினுள் இரத்த ஓட்டம் குறித்த கையின் ஊடாக இடம்பெற்றதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
எனினும் அவர் தற்போதுவரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பேராதனை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேக நபரான தங்கையின் கணவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கண்டி நீதிவான் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையம் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் துணையுடன் நேற்று பொலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து தாயாரையும் அந்த இளம்பெண்ணையும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது மட்டுமல்ல, விசாரணை நடைபெற்று வருவதாக மழுப்பல் பதிலை அளித்துள்ளனர்.