கூட்டு வன்புணர்வின்போது இளம்பெண்ணின் காதை வெட்டி வீசிய காமுகர்கள்!!

486

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் பாக்பட் மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளது.

பின்னர் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தினுள் இளம்பெண்ணை கடத்தி சென்ற அந்த கும்பல் அங்கு கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளது.

இதில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதுடன் அவரது காதையும் கத்தியால் வெட்டி வீசியுள்ளனர் அந்த கொடூர காமுகர்கள்.

இதனிடையே தமது மகளின் அழுகுரல் சத்தம் கேட்டு பதட்டமடைந்து ஓடிச்சென்று தடுக்க முயன்ற தாயாரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.

மட்டுமின்றி சம்பவம் நடந்த பின்னர் அதே நாள் அந்த கும்பல் திரும்ப வந்து இளம்பெண்ணையும் தாயாரையும் மிரட்டி விட்டு சென்றுள்ளது. இதனால் பயந்த அவர் கடந்த 4 ஆம் திகதி நடந்த சம்பவத்தை எவரிடமும் தெரிவிக்கவோ பொலிசில் புகார் அளிக்கவோ துணிவின்றி பயத்துடன் இருந்துள்ளார்.