வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!!

611

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (09.01.2017) மாலை 6மணியளவில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவனை மோதித்தள்ளியதில் சிறுவன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று மாலை 6 மணியளவில் தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் 6ம் ஒழுங்கையில் திரும்ப முற்படுகையில் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் (பீல்ட் பைக்) பிரகாஸ் பிரிந்தன் என்ற 15வயது சிறுவன் மீது மோதியதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அதிக வேகமாக சென்ற காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தலைமறைவாகி விட்டதாகவும், எனினும் அவர் செலுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தினை வைத்து அவரை கைது செய்ய முடியும் என நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.