வவுனியாவில் நடைபெற்ற காற்பந்தாட்டப் போட்டியில் மோதல் : இருவர் காயம்!!

687

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இன்று (09.01.2017) இரவு 8.30 மணியளவில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் காற்பந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியில் இன்று மாலை 7 மணியளவில் சூடுவெந்தபுலவு வளர்மதி விளையாட்டுக்கழகத்திற்கும் பட்டானிச்சூர் ஏ.பி.சி விளையாட்டுக்கழகத்திற்கும் இடையே போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே ஏற்ப்பட்ட முறுகல் கைகலப்பாக மாறி ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இப் போட்டியினை தொடர்ச்சியாக நடாத்த முடியாமையினால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.