குளிர்காலத்தில் யானைகளுக்கு ஆடை கொடுத்த புதுமை!!

348

 
குளிர்காலத்தில் பாதுகாப்பாக தூங்குவதற்காக, யானைகளுக்கு குளிரை தாங்கும் ஆடைகளை தயாரித்து அணிவித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மதுரா நகரத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகளுக்கான அமைப்பான எஸ்ஓஎஸ் யானைகள் பாதுகாப்பு மையத்தில், குளிர்காலத்தில் யானைகளை இதமாக வைப்பதற்கு தேவையான மிகப்பெரிய ஆடைகளை அருகிலுள்ள கிராமத்து பெண்கள் தயாரித்து கொடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக 20 யானைகளுக்கு தேவையான குளிர் தாங்கும் ஆடைகளை தயாரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலங்கள் செலவாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மைய நிறுவனர் கார்த்திக் சத்தியநாராயணன் குறிப்பிட்டுள்ளதாவது யானைகளுக்கு தேவையான பாதுகாப்பை நாம் உருவாக்கியுள்ளோம். அதுபோல குளிரை தாங்கும் ஆடைகளையும் வழங்கி அவற்றின் நலனில் புது வழிகளை பின்பற்ற தொடங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது 20 யானைகளுக்கு மட்டுமே ஆடைகள் அணிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் குளிர்காலத்திற்கு முதல் சுமார் 50 யானைகளுக்கு தேவையான ஆடைகளை தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.