கிளிநொச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் செய்த இளைஞன் விபத்தில் மரணம்!!

360

கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகிய இளைஞன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர் என தெரியவந்துள்ளது.குறித்த விபத்து கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் பலியாகிய இளைஞன் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை கற்கை நெறியை கடந்த ஆண்டில் நிறைவு செய்திருந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது24) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி – கந்தசுவாமி கோவில் முன்பாக நேற்றுமாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பிய நிலையில் கனரகவாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டிந்தனர்.