வவுனியா பேருந்து நிலையப் பிரச்சனைக்கு திங்கட்கிழமை முடிவு!!

214

 
வவுனியாவில் நேற்று மாலை அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் இணைந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தலைமையில் அவரது காரியலாயத்தில் மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிவரையும் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இக் கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றுள்ளதுடன் அரச தனியார் பேருந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒருமித்த கருத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு நீண்ட கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதுவரையும் எதுவித இடையூறுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தவேண்டாம் என்று இக் கலந்தரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்தரையாடலில் கலந்து கொண்ட அனைவரும் தவறாமல் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கலந்துரையாடல் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கபட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரச, தனியார் பேருந்து சங்கப்பிரதிநிதிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், சிறுவியாபரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.