வவுனியாவில் மிருக வைத்தியரின் அசமந்தப்போக்கால் பசுவும் கன்றும் இறப்பு!!

293

 
வவுனியாவில் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்த பசு மிருக வைத்தியரின் அசமந்த போக்கால் இறந்துள்ளது.

மகாறம்பைக்குளம் கல்வெட்டுசந்தி பிரதேசத்தை சேர்ந்த வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பசு ஒன்று கடந்த திங்கட்கிழமை காலை கன்று ஈனுவதற்காக இருந்த போதும் அது ஈனவில்லை.

கன்று இடையில் நின்று விட்டது. இது தொடர்பில் உடனடியாக மிருக வைத்தியரை நாடியும் அவசரமாக வர வேண்டும் என்று விடயத்தை கூறியும் அதனை குறித்த மிருக வைத்தியர் பொருட்படுத்தவில்லை.

பல மணி நேரம் மிருக வைத்தியசாலையில் காத்திருந்த குடும்பத்தவர் பின்னர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வைத்தியரின் சிகிச்சையின்றி மாலையளவில் பசு இறந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தவர் கருத்து தெரிவிக்கையில்,

இறந்த பசுவிலிருந்து ஒரு நாளைக்கு 6 லீட்டர் பால் கறந்து கொடுப்பதாகவும், வாழ்வாதாரமாக பசுவை நம்பியே வாழ்ந்து வருகின்றோம்.

இவ்வாறான வைத்தியர்கள் இருக்கும்வரை நாம் மீண்டும் மீண்டும் கஷ்டத்தின் மத்தியிலே வாழ வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.

இது போல் வேறு யாருக்கும் நடக்காத வண்ணம் இனிமேலாவது செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று மிருக வைத்தியரை தொடர்பு கொண்டு வினவிய போது, ஊடகத்திற்கு நான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை எனவும் அலட்சிய போக்கில் பதிலளித்தார்.