சூடுபிடிக்கும் அரசியல் : பிரம்மாண்ட மாநாடு நடத்தும் ரஜினி!!

384

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்கள் பலரின் வேதவாக்காக உள்ளது. அவரும் அப்போது வருவார், இப்போது வருவார், இதோ இறங்கிவிட்டார், அரசியலில் குதித்துவிட்டார் என சில உண்மையல்லாத தகவல்களும் வருகின்றன.

ஆனால் அவரோ நமக்கு எதுக்கு வம்பு, படம், ஆன்மீகம் என அதிலேயே முழ்கிவிட்டார். தற்போது தமிழகத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் பலவும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் மார்ச் மாதம் ரசிகர்களை ஒன்று திரட்டி பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

இதற்காக மாவட்டம் முழுக்க இருக்கும் ரசிகர்களை கணக்கெடுக்கும் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறதாம். மேலும் பல இடங்களுக்கும் விசிட் அடிக்கவுள்ளாராம். இதன் பிறகு அவர் அரசியல் குறித்த முடிவை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.