வவுனியாவின் முதலாவது விநாயகர் ஆலயமான பிரசித்தி பெற்ற குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று(09.02.2017) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.கந்தசாமி குருக்களின் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேகத்தில் அடியார்கள் பலர் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
8 ஆம் திகதி எண்ணைக்காப்பு இடம்பெற்று இன்று காலை விசேட வழிபாடுகள் அபிசேகங்கள் இடம்பெற்று 9 மணிக்கு மகா கும்பாபிசேகம் இடம்பெற்றிருந்தது.