ஆளுநரை தனியாக சந்தித்த இளவரசியின் மகன் விவேக் : சசிகலாவின் புதிய வியூகம்!!

305

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவை அவரது இல்லத்தில் நேரில் சென்று இளவரசியின் மகன் சந்தித்து பேசியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் யார் முதலமைச்சர் என்ற அதிகார போட்டி உச்சத்தில் இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ்.

இந்த நிலையில் பதவிப்பிரமாணம் நடைபெறுவதற்கு முன்னர் ஆளுநர் இல்லத்தில் சென்று இளவரசியின் மகன் விவேக், ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து சில நிமிடங்கள் பேசியுள்ளார்.

அவருடன் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் உடனிருந்துள்ளார். ஆளுநரிடம் இவர்கள் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என்றபோதும்,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறைல் ஏதேனும் சலுகைகள் வழங்கும் பொருட்டு கோரிக்கை முன்வைத்தார்களா?

அல்லது எடப்பாடி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டால் அதை தடுக்கும் வியூகங்கள் குறித்து சசிகலா சார்பில் அரசியல் பேசினார்களா என்பதும் மர்மமாகவே உள்ளது என அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.