வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!

354

 
வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் (16.02.2017) அன்று அதிபர் திருமதி.சிவசிதம்பரம் தலைமையில்இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள இருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ள முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வ.ஶ்ரீஸ்கந்தரஜா, பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.தேவிகா உமாதேவன்,

கௌரவ விருந்தினராக திரு.நவநீதன் அவர்களும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி அலுவலர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

விருந்தினர்களால் ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. பாடசாலை சமூகத்திற்கு பல தரப்பினர்களாலும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது. பின் தங்கிய கிராமம் ஒன்றில் இத்தகைய முன்னேற்றம் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.