நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது!!

312

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது பாவனா நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மர்ம குழு ஒன்று இவரது காரை வழிமறித்து, அதில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக பொலிஸில் நடிகை பாவனா முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

இதுதொடர்பாக, பாவனாவின் கார் சாரதியான மார்ட்டினை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை கேரளா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.