குசல் மென்டிஸ், உபுல் தரங்க, அசேல குணரத்ன மீது அதிக நம்பிக்கை உள்ளது : ரங்கன ஹேரத்!!

242

குசல் மென்டிஸ், உபுல் தரங்க மற்றும் அசேல குணரத்ன போன்ற வீரர்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

02 போட்டிகளை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நாளை பி.சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷிக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 259 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது.