இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணு, ரஜினிகாந்த், பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு எதிர் வரும் 28 ம் திகதி சென்னையில் ஆரம்பமாகிறது.
கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க ரஞ்சித் ஒப்பந்தமானார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிப் பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவாவில் தங்கியிருந்து படத்தின் கதை தயாரிப்பு பணியில் ரஞ்சித் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாகும் என்று தனுஷ் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியள்ளன.
கதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைந்துள்ளது. இதற்காக தாராவியின் செட்டை சென்னையில் அமைக்கும் பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.
தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.