ரஞ்சித் – ரஜினி கூட்டணியின் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பம்!!

296

இயக்­குநர் ரஞ்சித் மற்றும் தயா­ரிப்­பாளர் தாணு, ரஜி­னிகாந்த், பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்­பி­டிப்பு எதிர் வரும் 28 ம் திகதி சென்­னையில் ஆரம்பமா­கி­றது.

கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜி­னி­காந்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க ரஞ்சித் ஒப்­பந்­த­மானார். இப்­ப­டத்தை நடிகர் தனுஷ் தயாரிப் பதாக அறி­விக்­கப்­பட்­டது.

இதைத்­தொ­டர்ந்து கோவாவில் தங்­கி­யி­ருந்து படத்தின் கதை தயா­ரிப்பு பணியில் ரஞ்சித் ஈடு­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் சில வாரங்­க­ளுக்கு முன்பு ரஞ்சித் இயக்­கத்தில் ரஜி­னிகாந்த் நடிக்­க­வி­ருக்கும் படத்தின் படப்­பி­டிப்பு மே மாதம் ஆரம்பமாகும் என்று தனுஷ் தெரி­வித்­திருந்தார். அதற்­கான பணிகள் தற்­போது ஆரம்பமாகியள்­ளன.

கதையின் பெரும்­ப­குதி மும்பை தாராவி பகு­தியில் நடப்­பது போல அமைந்­துள்­ளது. இதற்காக தாரா­வியின் செட்டை சென்­னையில் அமைக்கும் பணியில் படக்­கு­ழு­வினர் இறங்­கி­யுள்­ளனர்.

தற்­போது இந்தப் பணிகள் நிறை­வ­டையும் தரு­வாயில் உள்­ளன. இந்­நி­லையில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் சென்னையில் இப்­ப­டத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.