வவுனியாவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு : வீடுகள், வாகனங்கள் பல சேதம்!!

353

 
வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் நேற்று கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று பகல் வவுனியாவில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய கட்டிடத்தின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால் கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா – குருமங்காடு பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், திருநாவற்குளம் பகுதியில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் அந்த பகுதியிலுள்ள சில வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், அந்த பகுதியில் சில மணிநேரம் மின்சாரமும் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.