T20 கிரிக்கெட்டில் வர போகும் அதிரடி மாற்றம்!!

249

T20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்ப வருடாந்திர கூட்டம் லண்டனில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை சேர்ப்பது, மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர்களை வெளியில் அனுப்பும் அதிகாரத்தை நடுவர்களுக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும், T20 போட்டிகளிலும் டிஆர்எஸ் முறையை அமல்படுத்துவது குறித்த முக்கிய விவாதமும் அதற்கான பரிந்துரைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்தனே, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட், டேரென் லீமென், ஷான் பொல்லாக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.