மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி!!

364

சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற் தீவிரவாத தாக்குதல் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மை காணப்பட்டது.

எனினும் தற்போது பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரோனி பிளானகன், “ சம்பியன் கிண்ண தொடரை முழு பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்கள் மற்றும் விளையாடும வீரர்களுக்கான முழு பாதுகாப்பை நாம் வழங்க தயாராகவுள்ளோம்”.

“மென்செஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளுககும் ஆயுதம் தாங்கிய இராணுவ அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் இன்னுமொரு தீவிரவாத தாக்குதல் இடம்பெறாது அதுமாத்திரமின்றி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான உயர்தர பாதுகாப்பு வழங்கப்படும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்