மூன்று இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு!!

236

சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 3 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது.

மின்சார துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் 1987, இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தின் 1910 அல்லது 1901 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் கொழும்பின் பல பாகங்களில் மின்விநியோக தடை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைக்கும் வகையிலேயே மின்விநியோக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.