வவுனியாவில் தொழில் முயற்சியை இனங்காணலுக்கான விழிப்புணர்வு சேவை!!

580

 
தொழில் முயற்சியை இனங்காணலுக்கும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வு சேவை இன்று(28.05.2017) வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இவ் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் திணைக்களங்கள் இதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தன.

திணைக்களம் மற்றும் நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தொழில் முயற்சிக்கான உதவித்திட்டங்கள் தொடர்பாக இதன்போது மக்களுக்கு தெளிவுறுத்தப்பட்டிருந்ததுடன் தொழில் முயற்சியை இனங்காணும் செயற்பாடும் இடம்பெற்றிருந்தது.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஜெயதிலக, ரிப்கான் பதியுதீன், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார் உட்பட வர்த்தக கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.