வவுனியாவில் இன்று (17.06.2017) 45ஆவது நாட்களாக சுகாதாரத் தொண்டர்கள் தமது நியமனத்திற்கான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் இன்று சுகாதார தொண்டர்களின் போராட்ட இடத்திற்குச் வருவதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் காலை 10.30 மணியவில் சென்று தனது வாகனத்திலிருந்தபடியே சுகாதாரத் தொண்டர்களை அழைத்து பேசிவிட்டு உத்தரவாதம் எதனையும் வழங்காமல் தம்தை எறமாற்றி விட்டுச் சென்றுவிட்டதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண சுகாதார அமைச்சரினால் உள்வாங்கப்பட்டு வவுனியா மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றி வந்த சுகாதாரத் தொண்டர்கள் கடந்த 45 நாட்களாக தமது நியமனத்திற்காக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.