கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெஸ்பேவ வீதியின் நுகேகொட – சூரியவெவ மாவத்தையின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் 119 அவசர அழைப்பு இலக்கம் ஊடாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாகவே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதான மத்துகம பகுதியை சேர்ந்த பிரியங்கா சங்கல்பனி குணசிங்க எனும் அழகுக்கலை நிலையம் ஒன்றில் சேவையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் என நம்பப்படும் இளைஞன் கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சந்தேக நபர் பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
‘கொலை செய்யப்பட்ட பெண் தனது காதலி எனவும் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பழைய கெஸ்பேவ வீதியில் மைதானம் அருகில் சென்றதாகவும் அங்கு அவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் அவரை கழுத்தறுத்து கொலை செய்ததாகவும் சந்தேக நபர் வாக்கு மூலம் அளித்துள்ளார். தமது காதலுக்கு இடையே மற்றொரு நபரின் காதல் விவகாரமும் தொடர்புபட்டதால் இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலைப் பகுதியை அண்மித்து மட்டும் 12 வெட்டுக் காயங்களும் உடல் முழுவதும் 20 வெட்டுக் காயங்கள் வரை காணப்படுவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சடலம் மீட்கப்பட்ட இரவில் ஸ்தலத்துக்கு பொலிஸார் விசாரணைக்காக சென்றிருந்த போது இரத்தம் சொட்டும் கத்தியுடன் சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இன்று கங்கொடவில நீதிமன் றில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.