வவுனியாவில் நடைபெற்ற “என் மனத் துளிகள்” கவிதைநூல் வெளியீட்டுவிழா!!

260

 
பிரமிளா(லதா) எழுதிய “என் மனத் துளிகள்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணி முதல் 5.30 மணி வரை வவுனியா,குருமன்காடு பிறின்சஸ் ரோஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

​​தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக சிறி ரெலோ செயலாளர் நாயகம் ப.உதயராசா, சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா,வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் கெளரவ விருந்தினர்களாக தமிழ் விருட்சம் செ.சந்திரகுமார், கலைஞர் மாணிக்கம் ஜெகன், வவுனியா ECBC ஸ்தாபகர் எஸ்.கிருஷ்ண்குமார், வவுனியா சர்வதேசப் பாடசாலை அதிபர் திருமதி.எலிசபெத் ஜேக்கப், USA வட பிராந்திய முகாமையாளர் J.கார்த்திகேயன், சேவா லங்கா நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.சபேஷன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.