வவுனியாவில் மலசலகூடத்தில் குழந்தையின் சடலம் :  பொலிசார் தீவிர விசாரணை!!

991

 
வவுனியா ஈச்சங்குளத்தில் நேற்று (20.06.2017) மாலை 5 மணியளவில் மலசலகூடத்திலிருந்து சடலமாக குழந்தையோன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு, ஈஸ்வரிபுரத்தில் வசித்து வரும் 26 வயது தாய் ஒருவர் நேற்று (20.06.2017) மாலை 5 மணியளவில் அவரின் வீட்டிலிலுள்ள மலசலகூடத்தில் ஆண் குழந்தையோன்றை பிரசரவித்துள்ளார். குழந்தை பிரசரவிக்கும் சமயத்தில் குழந்தை மலசல கூடத்தில் வீழ்ந்து இறந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.

இவ் விடயத்தினை கேள்வியுள்ள அயவலவர்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இறந்த குழந்தையின் சடலத்தினையும் குறித்த பெண்ணையும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

தற்போது குழந்தையின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயார் அதிக குருதி வெளியேற்றம் காரணமாக வைத்தியசாலையின் 7ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் 5 மற்றும் 7வயதில் இரு பெண் பிள்ளைகளின் தயார் ஆவார். குறித்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளதுடன் தனிமையில் வாழ்வதற்கு கடினம் என்பதால் அவரது சகோதரின் வீட்டில் வசித்து வருகின்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

இக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதனால் வவுனியா குற்றவியல் அதிகாரிகளின் உதவியுடன் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.