வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய முதலாவது மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று (08.07) மிகக் சிறப்பாக இடம்பெற்றது.
பெருந்திரளென மக்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுக்க அம்பாளது ரதம் இனிதே ஆலயத்தை வந்தடைந்தது. மேலும் அடியார்கள் தூக்குக்காவடி, காவடி மற்றும் பாற்செம்பு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.