வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய பொங்கல் உற்சவம்-2017

404
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இன்று 10.07.2017 திங்கட்கிழமை  காலை  பாற்குட பவனி இடம்பெற்றது .
அத்தோடு  வழமைபோன்று  ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு கிராமமக்களும்  தங்களது கிராமங்களின் பயன் கருதி பூசை வழிபாடுகளில் பங்குபற்றுவது வழமையானஒன்றாகும் .அந்தவகையில்  இன்று கிடாசூரி கிராமமக்களின்  உபயத்தில் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் அம்பாள உள்வீதி வலம் வந்து தொடர்ந்து இடபவாகனத்தில் வெளிவீதியில் எழுந்தருளிய நிகழ்வு இடம்பெற்றதோடு  பகல் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
தொடர்ந்து மாலையில் பொங்கல் உற்சவமும்  வசந்த மண்டப பூஜையின்  பின் கண்ணகை அம்பாள்  முத்துசப்பரத்தில் வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .