ஜேர்மனியில் பிச்சையெடுத்த வீராங்கனை!!

263

ஜேர்மனியில் கடந்த 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 5 பேர் தகுதி பெற்றனர்.

இதில், நாக்பூரைச் சேர்ந்த காஞ்சன்மாலா பாண்டே, கடல் அலைகளுக்கு எதிராக நீச்சல் அடிப்பதில் வல்லவராக அறியப்பட்டவர்.

சிறுவயது முதலே இரு கண்களிலும் பார்வையை இழந்தவர். இந்நிலையில், பெர்லின் நகருக்குச் சென்ற இவர்களுக்கு இந்திய பாராலிம்பிக் கமிட்டி ஒதுக்கிய நிதி சரியான சமயத்தில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பெர்லின் சென்ற பின்னர் கையில் போதிய பணமில்லாமல் தவித்த காஞ்சன்மாலா, அந்நகரில் பிச்சையெடுத்து தனக்கு தேவையான நிதியை திரட்டியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து போட்டியில் கலந்துகொண்ட காஞ்சன்மாலோ மற்றும் சுயேஷ் யாதவ் ஆகிய இருவரும் வெள்ளிப்பதக்கங்கள் வென்று, உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.