சயனைட் உட்கொண்டு குடும்பத்துடன் தற்கொலை!!

376

இந்தியாவில் கடன் தொல்லையால் நகைக்கடை அதிபர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் உடுப்பியை சேர்ந்தவர் சங்கர் ஆச்சார்யா(வயது 50), இவரது மனைவி நிர்மலா, இவர்களுக்கு சுருதி, ஸ்ரேயா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

நகைக்கடை அதிபரான சங்கருக்கு தொழில் நஷ்டமடைந்துள்ளது, இதனால் மனமுடைந்த சங்கர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதன்படி குடும்பத்துடன் சயனைட் உட்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தனர், நால்வரின் உடலையும் கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்பிஏ முடித்துள்ள சுருதிக்கு வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.