வவுனியாவில் மாடு கடத்தல் முயற்சி பொலிசாரால் முறியடிப்பு!!

593

 
செட்டிகுளத்திலிருந்து வவுனியாவிற்கு கொண்டு செல்ல இருந்த மாடும்  வாகனமும் நேற்று (17.07) காலை 6.30 மணியளவில் நெளுக்குளம் பொலிசாரால் முறியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நெளுக்குளம்  பாடசாலைக்கு முன்பாக நேற்று (17.07) காலை 6.30 மணியளவில் மகேந்திரா வாகனத்தை மறித்து சோதனையிட்ட போது சட்டவிரோதமான முறையில் மாடு கொண்டு செல்லப்பட்டதை அறிந்துகொண்ட பொலிசார் மாடுகளை பரிசோதித்தபோது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உரிமையாளர்களின் ஆவணங்கள், ஏதும் இன்றி சட்டவிரோதமான முறையில் வவுனியாவிற்கு  மாடு கொண்டு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாடு, மகேந்திரா வாகனம் அத்துடன்  வாகனச்சாரதியையும், உதவியாளரையும் கைது செய்ததுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெளுக்குள பொலிசார் தெரிவித்தனர்.