பெற்ற குழந்தையை ஏற்க மறுத்த தாய் : இலங்கையில் நடந்த விநோதம்!!

216

நுவரெலியாவில் பெற்ற குழந்தையை இளம் தாய் ஒருவர் ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையை பிரசவித்த பின்னர் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாதென 18 வயதுடைய தாய் ஒருவர் நிராகரித்துள்ளார்.

இதன்காரணமாக வைத்தியசாலை அதிகாரிகள் சிரமத்திற்கு முகங்கொடுத்ததாக நுவரெலிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிந்துல பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான தோட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

திருமணமான ஆணொருவருடன் ஏற்படுத்திற் கொண்ட தகாத உறவு முறையால் இந்த அவல நிலைக்கு குறித்த யுவதி முகங்கொடுத்துள்ளார்.

பெண் கர்ப்பமடைந்தவுடன் அவரை விட்டுச் செல்ல குறித்த ஆண் ஆரம்பித்துள்ளதாக இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அந்த நபர் தன்னை கைவிட்டு செல்ல ஆயத்தமாகுவதாக குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறான முறைப்பாடு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தமக்கு கிடைத்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வயது முழுமையடைந்த இருவரின் விருப்பத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனால் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.