பயாகல, கலமுல்ல ஏத்தகம ஆகிய பிரதேசங்களில் நடமாடி இரவு நேரங்களில் யுவதிகள் மற்றும் பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளுக்குள் நுழைந்து அவர்களைக் கட்டியணைப்பதாகக் கூறப்படும் ஒரு குழுவினரைக் கைது செய்ய பயாகல பொலிஸார் கிராமவாசிகளைக் கொண்ட பல விசேட குழுக்களை நியமித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிவரும் இக்குழுவை கைது செய்வது குறித்த பேச்சுவார்த்தை கலமுல்ல குழந்தை யேசு கன்னியர் மட தேவாலயத்தில் பங்குத் தந்தை இந்திரத்னசிறி பெர் னாண்டோ தலைமையில் பொலிஸார் மற்றும் கிராம சேவகர்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.
இரவில் பொலிஸாருடன் இணைந்து கிராமவாசிகள் ரோந்து செல்லவும் தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவின் நடமாட்டம் காரணமாக யுவதிகள் பெண்கள் இரவில் நித்திரை கொள்ள அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகின்றது.