இரவு நேரங்­களில் வீடு­க­ளுக்குள் நுழைந்து உறங்கும் பெண்களை கட்டியணைக்கும் குழு!!

634

பயா­கல, கல­முல்ல ஏத்­த­கம ஆகிய பிர­தே­சங்­களில் நட­மாடி இரவு நேரங்­களில் யுவ­திகள் மற்றும் பெண்கள் நித்­திரை கொள்ளும் அறை­க­ளுக்குள் நுழைந்து அவர்­களைக் கட்­டி­ய­ணைப்­ப­தாகக் கூறப்­படும் ஒரு குழு­வி­னரைக் கைது செய்ய பயா­கல பொலிஸார் கிரா­ம­வா­சி­களைக் கொண்ட பல விசேட குழுக்­களை நிய­மித்­துள்­ளனர்.

கடந்த சில வாரங்­க­ளாக பொது­மக்­களை பீதிக்­குள்­ளாக்­கி­வரும் இக்­கு­ழுவை கைது செய்­வது குறித்த பேச்­சு­வார்த்தை கல­முல்ல குழந்தை யேசு கன்­னியர் மட தேவா­ல­யத்தில் பங்குத் தந்தை இந்­தி­ரத்­ன­சிறி பெர் னாண்டோ தலை­மையில் பொலிஸார் மற்றும் கிராம சேவ­கர்கள் பங்­க­ளிப்­புடன் நடைபெற்றது.

இரவில் பொலி­ஸா­ருடன் இணைந்து கிரா­ம­வா­சிகள் ரோந்து செல்­லவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவின் நட­மாட்டம் காரணமாக யுவதிகள் பெண்கள் இரவில் நித்திரை கொள்ள அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகின்றது.