ஹட்டன் பாடசாலை மாணவி தொடர்பில் விசாரணை!!

211

நடந்து முடிந்த தமிழ் தின தேசிய போட்டி ஒன்றில் ஹட்டன் பிரதேசத்தின் மாணவி ஒருவர் பங்குபற்ற முடியாது போனமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்ற காரணத்தினால் அவர் தேசிய மட்ட போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மாகாண சபை அமர்வின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கல்விக்குழு ஒன்றுகூடலின் போது மாகாண சபையின் தமிழ் உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், கணபதி கனகராஜ், எம். ராம் மற்றும் எஸ் ஸ்ரீதரன் ஆகியோர் கையெழுத்திட்டு கோரிக்கை கடிதம் ஒன்றை கூட்டாக மாகாண கல்வி பணிப்பாளருக்கு கையளித்துள்ளனர்.

மேலும், அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும் மாணவியின் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் மாகாண சபை உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.