விவசாயியை தூக்கி காட்டுக்குள் வீசிய யானை!!

318

சேனையில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு இன்று அதிகாலை வீடு நோக்கி நடந்து சென்று விவசாயி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விவசாயி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கமத்தொழிலாளின் வீட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலிக்கு வெளியில் வந்திருந்த காட்டு யானையை விரட்ட முயற்சித்த போது யானை தும்பிக்கையால் விவசாயியை தூக்கி காட்டுக்குள் வீசியது என நேரில் பார்த்த விவசாயின் மகள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.