வவுனியாவில் ஆசிரியர் மீது தாக்குதல் : நால்வர் கைது!!

669

வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலை ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பாடசாலை முடிந்து தனது விடுதிக்கு சென்றுகொண்டிருந்த முதலியார் குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் சில இளைஞர்களால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த செட்டிகுளம் பொலிசார் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு இளைஞர்களை கைது செய்து நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா நீதிமன்றம் அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் அடையாள அணிவகுப்பும் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.