கமலின் மகளைக் கடத்த திட்டம் : பரபரப்புத் தகவல்!!

286

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பற்றித்தான் ரசிகர்கள் மத்தியில் பேச்சு. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்நிலையில் அவர் தன் வீட்டு வேலைக்காரர்கள் தன் மகளை கடத்த திட்டமிட்டனர், ஆனால் நான் அதை தெரிந்துகொண்டு காப்பாற்றிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

“அப்போது எனக்கு வந்த கோபத்திற்கு கொலை கூட செய்திருப்பேன். ஆனால் அப்படி நடந்துகொள்ளவில்லை” என கூறிய அவர், அதை மையமாக வைத்து தான் மகாநதி படத்தின் கதையை எழுதியதாக மேலும் தெரிவித்துள்ளார்.

கமலுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரு மகள்கள் இருக்கும் நிலையில், அவர்கள் எந்த மகளை கடத்த திட்டமிட்டார்கள் என்பதை குறிப்பிடவில்லை.