வவுனியாவில் ஆசிரியையின் தங்கச் சங்கிலி அபகரிப்பு!!

307

வவுனியா கற்குளம் பகுதியில் பெண்ணின் சங்கிலியை அபகரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

இன்று (18.09) பிற்பகல் 4 மணியளவில் ஆசிரியை ஒருவர் மோட்டார் சைக்கிளில் கற்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற வேளையில் அவரது வீட்டு நுழைவாயிலில் வைத்து கறுப்பு நிற பல்சர் பைக்கில் வந்த இனம் தெரியாத இருவர்கள் இவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர்.

குறித்த நபர்கள் இருவரும் வன்னிகோட்டம் சந்தியிலிருந்து குறித்த ஆசிரியை பின் தொடர்ந்து சென்று மக்கள் நடமாட்டம் இலையென்பதை அவதானித்த பின்னர் சங்கிலியை அபகரித்துள்ளனர்.

இவ் விடயம் குறித்து சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.