அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இதற்கமைய நாளை காலை 08.00 மணி முதல், நாடளாவிய ரீதியில், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும், இவர்களுடன் வேறு சில சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.