இரட்டைக் குழந்தைகள் விஷம் வைத்து கொலை : தந்தை செய்த கொடூரம்!!

250

 
தமிழகத்தில் இரட்டை குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26), இவரது மனைவி பாண்டியராணி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ராமன், லட்சுமணன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

வீரபத்திரனுடன் தகராறு ஏற்படவே பாண்டியராணி, இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 17ம் திகதி பாண்டியராணி தன்னுடன் அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.

அவர் வர மறுக்கவே, குழந்தைகளை மட்டும் அழைத்து வந்து விட்டார், இதற்கிடையே பாண்டியராணி கணவர் குறித்து பொலிசில் புகார் அளிக்கவே விசாரிப்பதற்காக பொலிசார் சென்றுள்ளனர்.

அங்கே வீரபத்திரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, அருகில் குழந்தைகளும் சடலமாய் கிடந்துள்ளனர்.

சோதனை செய்தததில் குழந்தைகளுக்கு இட்லியில் விஷம் வைத்து கொடுத்ததுடன் வீரபத்திரன் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த சூலூர் பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியை பிரிந்ததால் ஏற்பட்ட மனவருத்தமே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.