வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (28.09.2017) காலை 10.30 மணியளவில் வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரி எம். பி.றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், திட்டப்பணிப்பாளர் திரு.கிருபாசுதன், கணக்காளர், திணைக்களப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர் என பலரும் வாணி விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
இதன் போது கலை நிகழ்வுகள், கவிதை வாசித்தல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.