வவுனியாவில் 11 மாதக் குழந்தை பரிதாபமாக பலி!!

711

வவுனியா கல்மடு பகுதியை சேர்ந்தமுத்துலிங்கம் கிறிஸ்ரிகா எனும் 11 மாதக் குழந்தை காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் (28.09.2017) இரவு 11 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மேலும் இக்குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் திடீர் காய்ச்சல் காரணமாக வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் உள்ள தனியார் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு வழங்கப்பட்ட மருந்து அளவுக்கதிகமாக வழங்கப்பட்டமையினாலேயே குழந்தையின் இறப்பு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரி சிவனாதன் கிசோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்.